தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது கோட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் உரிமையை அஜித் பட நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது கோட் படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை மைத்ரி மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தெரிகிறது. லியோ படத்தை காட்டிலும் 10 கோடி அதிகமாக கொடுத்து கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.