தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வாலு திரைப்படம் இறுதியாக வெளியானதை தொடர்ந்து அடுத்ததாக நானே வருவேன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார். படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்க செல்வராகவனே வில்லனாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் விருது விழா ஒன்றில் செல்வராகவனுக்கும் விருது வாங்கிய தாணு அவர்கள் படம் பற்றி பேசியுள்ளார். செல்வராகவன் இயக்கிய படங்களிலேயே தரமான படமாக நானே வருவேன் திரைப்படம் இருக்கும். உலகம் முழுவதும் இந்தப் படம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்த உள்ளது.
தனுஷ் இதுவரை யாரும் நடிக்காத கதாபாத்திரத்தை ஏற்று இந்த படத்தில் நடித்துள்ளார் அதுவும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.