தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. அஜித், விஜய், சூர்யா, ரஜினி, விக்ரம், தனுஷ் என தமிழ் சினிமாவின் பெரும்பாலான நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
வல்லவன் படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டது. ஆனால் இந்த காதல் தோல்வியில் முடிந்தது. அதன் பின்னர் பிரபுதேவாவை காதலித்தார் நயன்தாரா.
அந்த காதலும் தோல்வியில் முடிந்த நிலையில் தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இருவருக்கும் திருமணம் எப்போது என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் பலமுறை செய்திகள் வெளியானதுண்டு. இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார்.
எனக்கும் நயன்தாராவுக்கும் இதுவரை சமூக வலைதளங்களில் 22 முறை திருமணம் செய்து வைத்துள்ளார்கள். மூன்று மாதத்திற்கு ஒருமுறை நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு திருமணம் என சமூக வலைதளங்களில் திருமணத்தை நடத்தி வச்சுடுறாங்க.
ஆனால் உண்மையில் எங்களுக்கு நிறைய கனவுகள் இருக்கு. அதையெல்லாம் முதலில் முடிக்கணும். மேலும் எங்களது காதலில் எப்போது எங்களுக்கு சலிப்பு ஏற்படுகிறதோ அப்போது தான் திருமணம் பற்றி யோசிப்போம் என கூறியுள்ளார்.