நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது.
இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. தினசரி செய்தி சேனல்களை ஆன் செய்தால் கொரோனா பற்றிய செய்திகள் தான் அதிகம். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து அவரும் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் கடந்த வாரம் எனக்கு கொரோனா பாசிட்டிவ் என பரிசோதனையில் வந்தது. இப்போது என் உடல் நிலை நன்றாக உள்ளது.
குணமடைந்து வருகிறேன். என்னைத் தேடிய எனது நெருங்கிய நபர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். அனைத்து முன்னணி சுகாதார பணியாளர்களுக்கும், சென்னை கார்ப்பரேஷனுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என பதிவு செய்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிக்கி கல்ராணி விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.
I was tested Positive for #COVID-19 last week.
I’m on my way to recovery and feeling much better now 🙏🏻😊
I’d like to thank my close ones for looking out for me, all the frontline Health Workers & mainly the #Chennai #TamilNadu #Corporation for their Constant Support ♥️ pic.twitter.com/bk6QsIqqZz— Nikki Galrani (@nikkigalrani) August 13, 2020