தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி கடுமையான விமர்சனத்தை பெற்ற பேஸ்ட் படத்தை தொடர்ந்து வரும் பொங்கலுக்கு தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழிகளில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் மீண்டும் மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைத்து 67வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசை அமைக்க 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தின் கதை குறித்து தகவல் என்று சமூக வலைதளங்களில் லீக்காகி உள்ளது. அதாவது, 50 வயதாகும் தளபதி விஜய் தன்னுடைய குடும்பத்துடன் அமைதியாக வாழ்ந்து வர திடீரென ஏற்படும் அசம்பாவிதத்தால் அமைதியான வாழ்க்கையிலிருந்து வன்முறைக்கு மாறுகிறார்.
ஏன் இந்த மாற்றம்? அப்படி விஜய் வாழ்க்கையில் நடந்தது என்ன? என்பது தான் இந்த படத்தின் கதைக்களமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் இந்த படம் வேற லெவலாக இருக்கும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.