Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரங்கன் முக்கியமானவன், நெருக்கமானவன்…. பசுபதி நெகிழ்ச்சி

pasupathi about sarpatta parambarai

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனி நடிப்பு திறனால் பலருடைய கவனத்தை ஈர்த்தவர் நடிகர் பசுபதி. இவர் தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் பசுபதியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இப்படம் குறித்து பசுபதி கூறும்போது, ‘தான் எடுத்து கொண்ட கதையை, சொல் நேர்த்தி, செயல் நேர்த்தியுடன் படைப்பதில் வித்தகர், பா.இரஞ்சித். ரங்கன் வாத்தியாராக என்னை செதுக்கியதற்கு அவருக்கு என் நன்றிகள் பல. என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன், நெருக்கமானவன். நண்பர் ஆர்யாவுடன் நடித்ததில் என்னிடம் மேலும் பெருமை சேர்ந்து கொள்கிறது.

என்னுடன் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், எந்த சமரசமும் இன்றி இப்படத்தை தயாரித்த நீலம் புரொடக்ஷன் & K9 ஸ்டுடியோவுக்கும் என் நன்றிகள்’ என்றார்.