கொரோனாவால் ஏற்கனவே சினிமா துறை நஷ்டத்தை அடைந்துள்ளது. இன்னும் முழுமையாக படப்பிடிப்பு பணிகள் துவங்கப்படவில்லை. கொரோனா காலத்தில் அரசு விதித்துள்ள நிபந்தனைகளின் படியே அவை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நீண்டகாலமாக மீ டூ என்ற டேக் மூலமாக நடிகைகள் பலர் பாலியல் குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்து வருகின்றனர்.
அண்மையில் ஹிந்தி சினிமா நடிகை பாயல் நடிகரும் இயக்குனருமான அனுராக் கஷ்யப் மீது பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்நிலையில் பாயலுக்கு ஆதரவாக சிலரும் எதிர்ப்பு தெரிவித்து சிலரும் பேசி வருகிறார்கள். மறுபுறும் அனுராக்கை விரைவில் கைது செய்ய வேண்டும் என பாயலின் வழக்கறிஞர் கூறிவருகிறார்.
அதே வேளையில் பாயல் நான் தூக்கில் தொங்கியபடி கிடந்து சடலமாக மீட்கப்பட்டால் நிச்சயம் அது கொலையாக தான் இருக்கும், தற்கொலை கிடையாது என கூறி மிரட்டல் காட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.