தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் மிகப் பிரமாண்டமாக உருவாக்கியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக உருவாக்கிய இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் உரிமையை பிரபல மியூசிக் நிறுவனமான டிப்ஸ் மியூசிக் ரூ 24 கோடிக்கு கைப்பற்றி இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் OTT ரிலீஸ் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூபாய் 125 கோடிக்கு கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.