Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட் கொடுத்த பிரகாஷ் ராஜ்

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

அடுத்த கட்டமாக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் அருகில் உள்ள ஒர்ச்சா என்ற இடத்தில் நடைபெற உள்ளது. இதற்காக மணிரத்னம், பிரகாஷ்ராஜ், கார்த்தி உள்ளிட்டோர் மத்திய பிரதேசம் சென்றுள்ளனர். உர்ச்சா படப்பிடிப்பு பற்றிய அப்டேட்டை நடிகர் பிரகாஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மணிரத்னம், கார்த்தி ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பதிவு செய்துள்ளார்.

சரித்திரப் புகழ் வாய்ந்த ஒர்ச்சா நகரத்தில் சதுர்புஜ் கோவில், சாத்ரிஸ், ஜஹாங்கிர் மகால், லட்சுமி நாராயண் கோவில், ராஜ மஹால், ராம் ராஜா கோவில் என பல இடங்கள் உள்ளன. அவற்றில் சில முக்கிய இடங்களில் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது.