News

அழகிய பெண் குழந்தைக்கு அம்மாவான பிரணிதா சுபாஷ்.. இணையத்தில் வைரலாகும் குழந்தையின் புகைப்படம்

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரணிதா சுபாஷ். இவர் தமிழில் உதயன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்களில் நடித்திருந்தார். அதையடுத்து தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் அவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார்.

பின்னர் பிரணிதா அவர்கள் நீண்ட நாட்களாக காதலித்து வந்த பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் நித்தின் ராஜு என்பவரை கடந்த ஆண்டு மே 13 ஆம் தேதியில் இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார். அப்போது கொரோனா வின் இரண்டாவது அலையின் காரணத்தால் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் மட்டும் திருமணத்தில் கலந்து கொண்டதால். அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் அவரின் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

இதனைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு பிரணிதா தனது கணவரின் பிறந்தநாளன்று தான் கர்ப்பமாக இருப்பதை ‘என் கணவரின் 34 வது பிறந்த நாளில் கடவுள் எங்களுக்கு தந்த வரம்’என்று மகிழ்ச்சியோடு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதையடுத்து தற்போது அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த பிரணிதா சுபாஷ் மருத்துவமனையில் இருந்து குழந்தையோடு இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

 

jothika lakshu

Recent Posts

தளபதி 69 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்,எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும்…

2 hours ago