தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வந்தவர் பிரசாந்த். ஹாய் தொள்ளாயிரத்து 90களின் முன்னணி நடிகராக வலம் வந்தார் அஜித் விஜய்க்கு போட்டியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார்போல அப்போது தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து வந்தார்.
இவருக்கு கடந்த 2005ஆம் ஆண்டில் தொழிலதிபர் ஒருவரின் மகளான கிரகலட்சுமி என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டு இருந்த நிலையில் கிரகலட்சுமி பிரசாந்த் விட வயதில் மூத்தவர் எனவும் பிரசாந்த் ஏமாற்றி திருமணம் செய்ததும் தெரியவந்தது. மேலும் அவருக்கு ஏற்கனவே ஒரு திருமணம் கூட நடந்து இருந்ததாகவும் சொல்லப்பட்டது.
இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பின்னர் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். திருமண வாழ்க்கையில் உடைந்துபோன பிரசாந்த் அதன் பின்னர் சினிமாவில் தொடர் தோல்விகளை சந்தித்து தடம் தெரியாமல் போனார்.
அதற்கு அடுத்ததாக தெலுங்கு படங்களில் மட்டும் அவ்வப்போது துணை நடிகராக தலை காட்டி வந்த இவர் தற்போது உடல் எடையை குறைத்து தமிழில் தன்னுடைய அப்பாவின் இயக்கத்தில் அந்த தூண் என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். மீது இவருக்கு இரண்டாவது திருமணம் நடக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டு வந்த நிலையில் அதனை பிரசாந்தின் தந்தை உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் தியாகராஜா அளித்துள்ள பேட்டி ஒன்றில் அந்தாதுன் படம் வெளியான அடுத்த மாதமே நடிகர் பிரசாந்த்துக்கு திருமணம். ஆனால் இது காதல் திருமணம் இல்லை. பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் என கூறியுள்ளார்.
இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் இந்த திருமணமாவது அவருக்கு மன மகிழ்ச்சியை தரட்டும் என வாழ்த்தி வருகின்றனர்.