விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் ஆதி பிரென்ட் வீட்டு பங்க்ஷனுக்காக ஜெஸ்ஸியுடன் கிளம்பி கொண்டிருக்க ஜெஸ்ஸி ஒரு கம்பல் போட்டு இது எப்படி இருக்கு என கேட்கிறார். அதெல்லாம் எதுக்கு கேக்குற பழசு ஞாபகப்படுத்தி என்ன எமோஷனாக்க பார்க்கிறாயா? என பேசுகிறார்.
ஆதி வாங்கி கொடுத்த வைரச் செயினை போட அதை பார்த்து அவன் இதை போடக்கூடாது என கூறுகிறான். இத பார்த்து அர்ச்சனா அண்ணி சந்தியா அண்ணி வயிறு எரியுறாங்க என சொல்ல சந்தியா அப்படிப்பட்ட ஆள் இல்லை என கூறுகிறார் ஜெஸ்ஸி. உன்ன விட அவங்கள பத்தி எனக்கு நல்லா தெரியும் சொன்னத மட்டும் செய்யணும் என சொல்ல செயினை கழட்டி போட்டு விடுகிறார்.
அதன் பிறகு சந்தியா சென்னைக்கு கிளம்ப சரவணன் இடம் எமோஷனலாக பேசிக் கொண்டிருக்கிறார். இருவரும் ரொமான்ஸ் செய்ய மறுநாள் காலையில் சந்தியா ஜெஸ்ஸியிடம் வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என சில அறிவுரைகளை வழங்க பிறகு பார்வதி மற்றும் மயிலு இருவரும் ரொம்ப முக்கியம். அவங்க ரொம்ப நல்லா ஜெல் ஆகிடுவாங்க என கூறுகிறார். இப்படியாக இன்றைய எபிசோட் முடிவடைய அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் சந்தியாவுக்கு ஆளாளுக்கு ஒரு கிப்ட் கொடுக்கின்றனர்.
ஆதி ஜெஸ்ஸியை தரக்குறைவாக நடத்த இந்த விஷயம் சந்தியாவுக்கு தெரிய வந்தால் என்ன நடக்கும் என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்க்கலாம்.