Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சந்தியாவிற்கு தெரிய வந்த உண்மை.. ஆதிக்கு காத்திருக்கும் ஷாக்.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

raja rani 2 serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடு சந்தியா அர்ச்சனாவை சந்தித்து உண்மையை சொல்லு என ஆதி குறித்த விஷயம் பற்றி கேட்க முதலில் அர்ச்சனா எனக்கு எதுவும் தெரியாது எனக்கு அல்ல பிறகு நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறுகிறார். ஆதி பொய் சொல்வதாக சொல்கிறார். பாதிக்கப்பட்ட பொண்ணுக்கு நீதி வாங்கி கொடுக்காமல் விடமாட்டேன் என சந்தியா முடிவு செய்கிறார்.

சந்தியாவிடம் உண்மைகளை சொன்ன அர்ச்சனா இன்னொரு பக்கம் சந்தியாவை கோர்த்து விட்டு அசிங்கப்படுத்த வள்ளி பாட்டியிடம் வந்து சந்தியா தான் இதையெல்லாம் திட்டம் போட்டு செய்திருப்பார் கொடுத்துவிட அவரும் அதை நம்பி சிவகாமியிடம் எனக்கு சந்தேகம் இதுதான் சந்தேகம் இருக்கு என சொல்கிறார். மேலும் அவளை போலீசாக விடாத என கூறுகிறார்.

பிறகு வீட்டில் எல்லோரும் அமர்ந்து இது குறித்து பேச அப்போது ஆதி விதவிதமான ரியாக்சன்களை கொடுக்கிறான். செந்தில் அப்படியே அவங்க போய் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தாலும் அதெல்லாம் அப்படியே நம்பிட மாட்டாங்க ஆதாரம் கேட்பாங்க எந்த ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் ஆதியுடன் பிளட் டெஸ்ட் எடுத்து செக் பண்ணாலும் அவனுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு தான் வரப்போகிறது அப்புறம் நாம எதுக்கு பயப்படனும் என சொல்ல ஆதி அப்படி எல்லாம் நடந்துட்டா மாட்டிக்குவேன் என முழிக்கிறார்.

பிறகு திடீரென பார்வதி பாஸ்கர் அவருடைய அம்மா என மூவரும் வர அவர்களை வரவேற்று உட்கார வைத்து பேசுகின்றனர். ஆடி மாசம் என்பதால் பார்வதியை உங்கள் வீட்டில் விட்டுப் போக வந்ததாக பாஸ்கரின் அம்மா சொல்கிறார். ஆதியின் முகத்தைப் பார்த்து பார்வதிக்கும் ஆதி தப்பு பண்ணியிருக்கான் என சந்தேகம் விழுகிறது. இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அடுத்ததாக வெளியான ப்ரோமோ வீடியோவில் ஆதி ஜெசியை சந்தித்து மிக கர்ப்பமான விஷயத்தை முதலில் என்கிட்ட சொல்லி இருக்கணும் அதை விட்டுட்டு இப்படி பண்ணா எப்படி? அந்த குழந்தையை அபார்ட் பண்ணிட்டு வேற வழியை பாரு என சொல்கிறான்.

raja rani 2 serial episode update
raja rani 2 serial episode update