தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. விறுவிறுப்பு இல்லாத கதையால் சீரியல் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் டல் அடித்து வருகிறது.
இப்படியான நிலையில் நேற்றைய எபிசோடில் ஆதி மற்றும் ஜெஸ்ஸி இருவரும் வீட்டில் சந்தித்துக் கொள்ள ஆள் இல்லாத காரணத்தினால் முத்த காட்சியில் எல்லை மீறுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இந்த காட்சிகள் தான் தற்போது சர்ச்சையை கிளப்பி விவாத பொருளாக மாறி உள்ளது. சிறுவர்கள் முறை பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கும் சின்னத்திரை சீரியல்கள் இது போன்ற முத்த காட்சிகள் தேவையா என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இதெல்லாம் சின்னத்திரை மூலமாக சமூகத்தை சீரழிக்கும் செயல் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன்னதாக சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலில் இடம்பெற்ற ரொமான்டிக் காட்சிகள் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.