News

அர்ச்சனா மற்றும் செந்திலால் ஸ்டேஷனுக்கு போன சரவணன்.. குடும்பத்தில் ஏற்பட்ட பதற்றம்.. ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. ஸ்டேஷனில் செந்திலும் அர்ச்சனாவும் இருக்கும் நேரத்தில் சரவணன் அங்கே செல்கிறார். எங்களைப் பார்த்ததும் என்ன பிரச்சனை ஏன் உங்கள போலீஸ் புடிச்சு வச்சிருக்காங்க என கேட்க வீட்டில் பொய் சொல்லிவிட்டு குற்றாலம் போய் லாட்ஜில் ரூம் போட்டு தங்கிய விஷயங்களைச் சொல்கிறார். இதைக்கேட்டு சரவணன் அதிர்ச்சி அடைகிறார். உங்களுக்கு இதெல்லாம் தேவையா போலீஸ் கேஸ் போட்டு இருந்தா என்ன பண்ணுவீங்க என திட்டுகிறார்.

பிறகு போலீஸ் வந்ததும் அவர்களிடம் தகுந்த ஆதாரங்களைக் காட்டி சென்று தன்னுடைய தம்பி எனவும் அர்ச்சனா தம்பியின் மனைவி எனவும் எடுத்துச்சொல்லி அவர்களை அங்கிருந்து அழைத்து வருகிறார். உள்ளூர்ல இருந்தது எது நல்லது எது கெட்டது தெரியாத நீ இந்த மாதிரி நடக்காம பாத்துக்கங்க என போலீசார் செந்திலை திட்டி அனுப்பி வைக்கின்றனர்.

இரவெல்லாம் சரவணன் காத்துக்கொண்டிருந்த சந்தியா மணி ஆறரை ஆனதும் பதறியடித்து என்று இன்னும் சரவணனை காணவில்லை என துடிக்கிறார். அவருக்கு முன்னதாக குடும்பத்தில் உள்ள எல்லோரும் எழுந்து சரவணனை இன்னும் வரவில்லையே என்று பதற்றத்தோடு இருக்கின்றனர். பிறகு சந்தியா வெளியே செல்ல சரவணன் உனக்கு போன் பண்ணா நான் எங்க இருக்கேன் ஏதாவது தெரியுமா என கேட்க சந்தியா எனக்கு எதுவும் தெரியாது அவர் போன் பண்ணல என கூறுகிறார். நானும் நாலு முறை அவருக்கு போன் பண்ணி ஆனால் அவர் எடுக்கவில்லை என சொல்கிறார்.

இதனால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். சரவணன் கடையிலேயே படுத்து தூங்கி விட்டானா என பார்க்குமாறு ஆதியை சிவகாமி அனுப்பி வைக்கிறார். அங்கு போய் பார்த்து விட்டு வந்த அதே அங்கும் இல்லை என கூறுகிறார். சந்தியாவும் விடாமல் சரவணனுக்கு ஃபோன் செய்ய அவர் எடுக்கவில்லை.

செந்தில் அர்ச்சனாவோடு ஆட்டோவில் வந்து கொண்டிருக்கும் சரவணன் பாதியில் நிறுத்திவிட்டு அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு எவ்வளவு பெரிய பொய் சொல்லிட்டு அப்படி என்ன உங்களுக்கு ஊர் உத்த வேண்டியிருக்கு? அர்ச்சனா பகுத்தறிவு இல்லனா உனக்கு எங்க போச்சு? பொண்டாட்டி நாளை இருக்க மயக்கத்துல அவர் சொன்னது எல்லாத்தையும் அப்படியே கேட்டு நடக்க கூடாது. எல்லாத்தையும் யோசிச்சு அனுசரித்து தான் முடிவெடுக்கணும் என சொல்கிறார்.

சரவணன் அறிவுரையைக் கேட்டு அர்ச்சனா கடுப்பாகி மனசுக்குள் குழந்தையை கலைக்க போனேன். அது நடக்கலைனு நானே வெறுப்புல இருக்கேன் என பேசிக் கொள்கிறார். இதைப்பத்தி வீட்ல எதுவும் நான் சொல்ல மாட்டேன். சந்தர்ப்பம் கிடைக்கும்போது நடந்ததை நீங்களே சொல்லி மன்னிப்புக் கேளுங்கள் என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

வீட்டில் உள்ளவர்கள் சரவணனை காணவில்லை என இந்த பக்கம் பதற இவர்கள் மூவரும் ஆட்டோவில் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.

Raja Rani2 Serial Episode Update 04.02.22
jothika lakshu

Recent Posts

அரிசி கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

அரிசி கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். பெரும்பாலானோர் சாதம் வடித்து மீதி தண்ணியை கீழே ஊற்றி விடுவார்கள்.…

5 hours ago

சீதாராமன் சீரியலை கலாய்த்து பாக்கியலட்சுமி ரேஷ்மா போட்ட பதிவு

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சீதா ராமன். இந்த சீரியலில் மகாலட்சுமி…

5 hours ago

வேலவன் ஸ்டோர்ஸ் ஆஃபர் கண்டு வியந்து போன மகாநதி சீரியல் நடிகை லட்சுமி பிரியா, வீடியோ இதோ

எங்க பாத்தாலும் ஆஃபர் ஆஃபர் தான் என அசந்து போய் உள்ளார் மகாநதி சீரியல் காவேரி. தமிழ் சின்னத்திரையில் விஜய்டிவி…

6 hours ago