Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சந்தியாவை பாராட்டிய கௌரி மேடம். மகிழ்ச்சியில் சந்தியா. இன்றைய ராஜா ராணி 2எபிசோட்

rajarani 2 serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் தண்ணீர் நிரப்பும் போட்டி தொடங்க அப்துல் டீம் ரொம்பவே பின் தங்கியுள்ளது. இதனால் இவர்கள் அனைவரும் கடுமையாக முயற்சி செய்ய வாலியை இழுக்கும் அப்துல் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வர தொடங்குகிறது. இன்னும் பத்து நிமிடத்தில் 100 லிட்டர் தண்ணீர் நிரப்ப வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் சந்தியா டக்கென்று தண்ணீர் தொட்டிக்குள் குதித்து தண்ணீரை எடுத்துக் கொடுக்கிறார்.

இதனையடுத்து வேக வேகமாக தண்ணீரை நிரப்பி போட்டியில் ஜெய்கின்றனர். மேலும் இந்த போட்டியில் சந்தியாவின் முயற்சி கௌரி மேடமால் பாராட்டப்படுகிறது. அடுத்து சந்தியா இதுவரை செய்த விஷயங்களை பற்றி கூறி பாராட்டுகிறார் கௌரி மேடம்.

ஹோட்டலில் நடந்த பிரச்சனையில் சந்தேகம் இது எந்த தவறும் இல்லை குடித்துவிட்டு தவறாக நடந்து கொண்ட நபரை தான் அடித்ததாக விசாரணை கமிஷன் ரிப்போர்ட் அளித்திருப்பதாக கௌரி மேடம் கூறி அவருக்கு ஸ்டார் பெர்பார்மர் விருதை வழங்குகிறார். அடுத்து சந்தியா அந்த ரெண்டு நாள் லீவு மட்டும் என கேட்க லீவு கொடுக்கிறார் கௌரி மேடம்.

இந்த பக்கம் சிவகாமி சந்தியாவை நினைத்து வருத்தமாக இருக்க அப்போது அர்ச்சனாவின் அம்மா போன் போட்டு சந்தியா வரமாட்டாளாமே என கேட்க சிவகாமி பதில் சொல்ல முடியாமல் தவிக்க உங்களுக்கு என் பொண்ணுனாலே எப்பவுமே இலக்காரம் தானே என பேசி போனை வைக்கிறார். சந்தியா வந்தா நல்லா இருக்கும் என சிவகாமி தன்னுடைய கணவரிடம் சொல்லி வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

rajarani 2 serial episode update
rajarani 2 serial episode update