தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சைக்கிள் ரேஸ் தொடங்கப்பட சந்தியா எல்லோரும் அவரவர் சைக்கிள் அருகே செல்ல சந்தியா குறிப்பிட்டு இருந்த 23 வது நம்பரில் அவருடைய பெயர் இல்லாமல் அதற்கு மாற்றாக ஐந்தாவது எண்ணில் அவருடைய பெயரை பார்த்து ஷாக்காகி நான் 23 வது நம்பரை தான் குறிப்பிட்டிருந்தேன் என சொல்லி மாத்தி கொடுக்க சொல்ல அதற்கு அதிகாரி முடியாது என கூறி விடுகிறார்.
சந்தியா அதிகாரியிடம் பேசிக் கொண்டிருக்கும் கேப்பில் ஸ்வேதா சைக்கிளில் பெடலை லூஸ் செய்து விடுகிறார். இந்த பக்கம் ஆதி ஜெசி கூட்டிக்கொண்டு வெளியே செல்வதாக சொல்லிவிட்டு பிறகு இந்தாங்க வீட்டு செலவுக்கு பணம் என கொடுக்க சிவகாமி சந்தோஷப்படுகிறார். ஆதி மனதுக்குள் என் பணத்தை ஒத்த பைசா தரமாட்டேன் இது என் மாமனார் வீட்டு பணம் என சந்தோஷப்பட்டு கொள்கிறான்.
அடுத்து இந்த பக்கம் சந்தியா எப்படியாவது இந்த சைக்கிள் ரேஸில் ஜெயிக்க வேண்டும் என சைக்கிளை ஓட்டிக் கொண்டிருக்க பல பேர் எண்ணெயில் வழுக்கி கீழே விழுகின்றனர். அடுத்து இந்த பக்கம் செந்தில் மற்றும் அர்ச்சனா வீட்டில் தேர்தலில் நிற்பது பற்றி சொல்ல வேண்டாம் என பேசிக்கொண்டு இருக்க சிவகாமியின் அவரது கணவரும் சரவணன் தேர்தலில் நிற்பதை பற்றி பேர் சொல்லாமல் பேசி சந்தோஷப்பட தங்களை பற்றி தான் பேசுகிறார்கள் என இவர்களும் உங்களுக்கு அதில் சம்மதமா என கேட்க இதில் எங்களுக்கு சந்தோஷம்தான் என சொல்ல செந்திலும் அர்ச்சனாவும் தங்களைப் பற்றி தான் சொல்கிறார்கள் என தவறாக புரிந்து கொள்கின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.