தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக ஜெய் பீம் படம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இது கமர்சியல் படமாக இருக்குமா அல்லது ஜெய் பீம் போன்ற படமாக இருக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இப்படியான நிலையில் இந்த படத்தில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக நடிக்கும் ரஜினி தூக்கு தண்டனையை எதிர்த்து போராடுபவராக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
