Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திருவண்ணாமலை கிரிவல பாதை குறித்து பேசிய ரம்யா பாண்டியன்..!

Ramya Pandian spoke about Tiruvannamalai

ஜோக்கர்,ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு சில மாதங்களுக்கு முன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. கணவருடன் இருக்கும் புகைப்படங்களையும் அவ்வபோது பகிர்ந்து வருகிறார்.

இப்படியான நிலையில் ரம்யா பாண்டியன் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று உள்ளார் அப்போது நடந்த சில அனுபவங்கள் குறித்து அவர் பகிர்ந்து உள்ளார் அதாவது கிரிவலப் பாதையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தனக்கு நிரந்தரமான அமைதியை கொடுப்பதாகவும் ஒரு பவர் வருவதை உணர்ந்ததாகவும் கூறியிருக்கிறார். இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் இப்படி ஒரு அற்புதம் கிடைக்கிறது மேலும் கிரிவலப் பாதையின் போது என்னுடன் வந்த ஒருவர் நீங்கள் ஒரு தேவதை உங்களுடன் கிரிவலப் பாதையில் நடப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என்று சொன்னதாகவும் கூறி இருக்கிறார்.

இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Ramya Pandian spoke about Tiruvannamalai
Ramya Pandian spoke about Tiruvannamalai