தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களில் ஒருவராக விளங்கி வருபவர் ரவீந்திரன். லிப்ரா ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பாளரான இவர் சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இது குறித்து வனிதா விஜயகுமார் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கர்மா ஈஸ் பூமராங் அது தான் இப்போது ரவீந்தரனை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது போல பதிவு செய்திருந்தார். காரணம் வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்ட போது பீட்டர் பால் அவர்களின் மனைவிக்கு ஆதரவாக ரவீந்திரன் பேசி இருந்தது தான்.
இப்படியான நிலையில் தற்போது ரவீந்திரன் வனிதாவின் பதிவு குறித்து பதிலடி கொடுத்துள்ளார். வனிதா அவரது ட்விட்டர் பக்கத்தில் குருமா ஈஸ் என ஏதோ பதிவு செய்திருந்தார். அது என் வாயில் கூட நுழையவில்லை அதை பற்றி எல்லாம் நான் பேச விரும்பவில்லை. என்னுடைய வாழ்க்கை யாருடைய கண்ணீரிலும் தொடங்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இவருடைய இந்த பதிலடி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு வனிதா மீண்டும் எப்படி ரியாக்ட் செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.