தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக அஜித் 61 திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்து வருகிறார்.
படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பெப்சி தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ஆர் கே செல்வமணி அவர்கள் அஜித்துக்கு நேரடியாக கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
உங்களுக்கு வருமானம் கொடுக்கும் தமிழகத்தில் ஷூட்டிங்கை நடத்துங்கள். ஹைதராபாத்தில் நடத்துவதால் பெப்சி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். வருமானம் கொடுப்பது தமிழ்நாடு ஆனால் நீங்கள் செலவு செய்வது ஹைதராபாத்திலா என அவர் கேள்வி எழுப்பி கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் இயக்குனர்கள் தமிழ்நாட்டை விட்டு விட்டு மற்ற இடங்களில் சென்று ஷூட்டிங் நடத்தி செலவு செய்யும் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.