தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
பலரும் கதையில் லாஜிக் இல்லை, நாங்க எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என கூறி வருகின்றனர். இந்த நிலையில் விஜயின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகரன் அவர்கள் பீஸ்ட் படத்தை பற்றி விமர்சித்துள்ளார்.
படத்துல எல்லாரும் இருக்காங்க ஆனால் திரைக்கதை தான் இல்லை. விஜயை மட்டுமே நம்பி படம் எடுத்தது போல உள்ளது என்று கூறியுள்ளார்.
இளம் இயக்குநர்கள் பெரிய நடிகர்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததும் சொதப்பி விடுகின்றனர் என கூறியுள்ளார்.
