சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான மோதல் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த வாரம் லடாக் பகுதியில் நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதனால் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே போர் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. இந்தியா சீனாவுக்கு நிச்சயம் தக்க பதிலடி கொடுக்கும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
திரையுலக பிரபலங்களை சீனாவின் இந்த செயலுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. அதேபோல் இந்தியர்கள் சீனப் பொருட்களை வாங்குவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். இதன் மூலமாக நம்முடைய எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டும் என கூறி வருகின்றனர்.
இப்படியான நிலையில் பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான சாக்ஷி அகர்வால் இனி சீனப் பொருட்கள் எதையும் வாங்க மாட்டேன்.
சீன பொருட்களின் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.