தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் நடித்து வரும் இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை பத்து வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் நான்கு வருடங்களிலேயே இவர்களின் திருமண வாழ்க்கை கசந்து போனது. சில மாதங்களுக்கு முன்னர்தான் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொள்வதாக அறிவித்தனர்.
இதனையடுத்து சமந்தா படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிக்க ஆபாசமாக கமெண்ட் பதிவிட அதற்கு சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.
முதலில் ஒரு பெண்ணை அவள் அணியும் ஆடைகள், சமுதாயத்தில் அந்தஸ்து, கலர் உள்ளிட்டவர்களிடம் வைத்து எடை போடுவதை நிறுத்தங்கள் என கூறியுள்ளார். இப்படி ஒரு பெண்ணை அடைபடுவதால் ஏற்படும் வலியை நான் உணர்ந்துள்ளேன் என அவர் கூறியுள்ளார். இவருடைய இந்த பதிலடி சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
View this post on Instagram