தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பத்து வருடங்களாக உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் நான்கு வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
கடந்த 6 மாதங்களாக இவர்களது விவாகரத்து குறித்த பேச்சு தான் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இதுவரை இவர்களின் விவாகரத்து குறித்த பேச்சுக்கள் ஓய்ந்தபாடில்லை. விவாகரத்து பெற்று பிரிந்த இருவரும் நல்ல நண்பர்களாக பயணத்தை தொடருவோம் என சொல்லி இருந்தனர்.
இப்படியான நிலையில் சமந்தா தன்னுடைய டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் நாக சைதன்யாவை Unfollow செய்ய ரசிகர்கள் அவர் மீது அப்படி என்ன கோபம் என அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கு பதிலடி தரும் விதமாக நாக சைதன்யாவும் சமந்தாவை தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் Unfollow செய்துள்ளார். நல்ல நண்பர்களாக இருப்போம் என சொன்ன இருவரும் இவ்வாறு செய்திருப்பது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி ஆகிவிட்டது.