Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விவாகரத்து குறித்து ரட்சிதா வெளியிட்ட தகவல் .. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Saravanan Meenakshi Rakshitha About Divorce Details

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ரட்சிதா. சரவணன் மீனாட்சி சீரியலில் ஹீரோக்கள் மாறினாலும் நாயகி மட்டும் மாறாமல் இவரே நடித்து வந்தார்.

அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வந்த இவர் திடீரென இதிலிருந்து விலகிக் கொண்டு கன்னட படம் ஒன்றில் நாயகியாக நடித்தார். மேலும் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் தன்னுடைய கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக சமீபகாலமாக தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த நிலையில் தற்போது அதனை உறுதிப்படுத்தியுள்ளார். சொல்ல மறந்த கதை சீரியலின் கதாபாத்திரமும் தன்னுடைய வாழ்க்கையும் ஒன்றில் போவதாக இவர் தெரிவித்துள்ளார்.

சொல்ல மறந்த கதை சீரியலில் ஒரு பெண் கணவரை இழந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் ஏற்படும் பிரச்சினைகளை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் சீரியல் கதை களம். இப்படியான நிலையில் இந்தக் கதை தன்னுடைய வாழ்க்கையுடன் ஒன்றி போவதாக அவர் கூறியிருப்பது விவாகரத்தை உறுதி செய்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இவரின் கணவர் சீரியல் நடிகர் தினேஷ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Saravanan Meenakshi Rakshitha About Divorce Details
Saravanan Meenakshi Rakshitha About Divorce Details