தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா சரண். இவர் ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம், விஷால் போன்ற பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து பல ரசிகர்களின் மனதில் நீங்க இடம்பிடித்தார். இவர் நடிப்புக்கு மட்டுமல்லாமல் இவரின் நடனத்திற்கும் தனி ரசிகர் கூட்டம் உண்டு என்றே சொல்லலாம்.
இப்படி பிரபலம் முன்னணி நடிகையாக ஜொலித்த இவர் திடீரென்று தனது காதலரை திருமணம் செய்துகொண்ட பின்பு படம் நடிப்பதை தவிர்த்துவிட்டு ஸ்பெயின் நாட்டில் செட்டிலாகிவிட்டார். அதற்குப் பின் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஸ்ரேயா தனது மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
அடிக்கடி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் சுற்றுலா தலங்களுக்கு சென்று ஜாலியாக இருக்கும் ஸ்ரேயா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட க்யூட்டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தை வெகுவாக கவர்ந்து ரசிகர்களிடம் பல லைக்ஸ்களை குவித்து வருகிறது.
View this post on Instagram