மத்திய பிரதேசத்தை சேர்ந்த நடிகை ஸ்வேதா திவாரி உள்ளாடை குறித்து பேசிய வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்வேதா திவாரி ‘ஷோ ஸ்டாப்பர்’ என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். அந்த தொடர் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘கடவுள் எனது உள்ளாடையை அளவு எடுத்து கொண்டிருக்கிறார்’என கூறினார். அவர் பேசிய வார்த்தைகள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து 24 மணி நேரத்தில் விசாரணை நடத்தி ஸ்வேதா திவாரி மீது நடவடிக்கை எடுக்க அம்மாநில மந்திரி நரோட்டம் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.