தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 15 வருடங்கள் ஆன நிலையில் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொள்வதாக அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த அறிவிப்புக்கு பிறகு இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வந்தனர். ஆல்பம் பாடல் ஒன்றை இயக்கியுள்ள ஐஸ்வர்யா தனுஷ் அடுத்ததாக நடிகர் சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் பரவியது.
இந்த நிலையில் தற்போது நடிகர் சிம்பு தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர். அதாவது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என கூறியுள்ளனர். இதனால் இந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தி என தெரியவந்துள்ளது.