தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா ரவி மற்றும் ஸ்ருதியை வீட்டுக்கு கூப்பிட சொல்ல விஜயாவும் மீனா சொல்றது தான் சரி என சொல்கிறாள்.
இருப்பினும் அண்ணாமலை என் மனசு அதை ஏத்துக்கல, அவங்க வாழ்க்கையை அவங்க பார்த்துக்கட்டும் என சொல்ல விஜயா ஷாக் ஆகிறார். மறுபக்கம் ரவி குடும்பத்துடன் சேர்ந்து இருக்கணும் என தனது ஆசையை சொல்ல ஸ்ருதி முத்து இருக்கும் வீட்டில் இருக்க முடியாது என்று ஷாக் கொடுக்கிறார்.
பிறகு ரோகினி பிஏ-வுக்கு பணம் கொடுக்க பார்க் வருகிறார். பணத்தை கொடுத்து விட்டு இனிமே பணம் தர முடியாது என்று சொல்ல பிஏ நிம்மதியா வாழணும்னா பணத்தை தந்து தான் ஆகணும் என மிரட்டுகிறார்.
வரும் போது மனோஜை பார்த்து விட மனோஜ் இவர்களை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.கிளையண்ட்டை பார்க்க வந்ததாக சமாளித்து நீங்க எதுக்கு வந்தீங்க என கேட்க ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.
நித்யாவுக்கு மாப்பிள்ளை பார்க்க வந்ததாக சமாளித்து அங்கிருந்து கிளம்பி வருகிறார். வீட்டில் விஜயா ரவி வராமல் சாப்பிட மாட்டேன் என அடம்பிடிக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
