தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மலேசியாவில் இருந்து வந்த இரண்டு பேரை அழைத்துக் கொண்டு காரில் பேசிக்கொண்டு வருகிறார். மலேசியா பற்றியும் விசாரித்துக் கொண்டு வர, அவர்கள் அங்கே ஏதாவது கோவிலிருந்தா நிறுத்துங்க இவருக்கு 60-வது பிறந்தநாள் என்று சொல்ல அப்படியா சந்தோஷம் சிறப்பா பூஜை பண்ணிடுவோம் என்று சொல்லுகிறார் முத்து.
உடனே மீனாவிற்கு ஃபோன் போட்டு கேட்க அம்மாவோட கடையில தான் இருக்கேன் என்று சொல்ல நல்ல விஷயம் நான் மலேசியாவில் இருந்து வந்திருக்காங்கன்னு சொன்னேன்ல அவங்களுக்கு அறுபதாவது பிறந்த நாள் அதை கொண்டாடணும் பூஜை ஏற்பாடு ரெடி பண்ணிடு என்று சொல்ல சரிங்க என்று சொல்லிவிட்டு மீனா ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார் அந்த நேரம் பார்த்து சிட்டி கோவிலுக்கு வர சத்யா பூக்கடையில் இருக்கிறார். அக்கா உள்ள போயிருக்க எதுனா பிரச்சனை பண்ணுவான் என்று சொல்ல அதனால இருக்காது அவன் சாதாரணமாக கூட வந்து இருப்பா அமைதியா இரு என்று சொல்லுகின்றனர். உடனே உள்ள போன சிட்டி நிர்வாகியிடம் ஓர் கேசுக்காக சிசிடிவி ஃபுட் ஏஜ் தேவைப்படுது கிடைக்குமா என்று சொல்ல அதெல்லாம் கிடைக்காது என்று சொல்லுகிறார் நான் இங்கே மீனாவும் உங்க அம்மாவையும் தெரியும் சத்யாவும் என் பிரண்டு தான் என்று சொல்ல மீனாவே என்கிட்ட கேட்டது நான் கொடுக்க மாட்டேன் என்று சொல்லிட்டேன் அதுக்குன்னு ஒரு ரூல்ஸ் இருக்கு ஒன்னு போலீஸோட வந்தா கொடுப்போம் இல்லன்னா கோர்ட்ல வந்து கேட்டா கொடுப்போம் மத்தபடி வேற யாருக்கும் கொடுக்க முடியாது என்று சொல்ல சிட்டியும் வேற வழியில்லாமல் கிளம்பி விடுகிறார்.
கோவிலில் இருந்த நிர்வாகி மீனாவிடம் நீ கேட்டது போல இன்னொரு தடவை அதே நாள் வீடியோவை கேட்டாங்க என்று சொல்ல யார் என்று கேட்டவுடன் சிட்டியின் பெயரை சொல்ல மீனா யோசிக்கிறார். பிறகு வெளியே சென்ற பின் சிட்டி வந்த விஷயத்தை சொல்ல எனக்கும் தெரியும் எதற்காக வந்தான்னு சொல்லுகிறார். நம்ம கேட்ட அதே ஃபுட்டேஜ் தான் கேட்க வந்திருக்கான் என்று சொல்ல, ரோகினி சொல்லித்தான் வந்திருப்பான் என்பதை யோசிக்கின்றனர்.உடனே அந்த நேரம் பார்த்து முத்து அவர்களை கூட்டிக்கொண்டு வர இது மாதிரி ஒரு நல்ல பையன் கிடைக்கறதுக்கு நீ கொடுத்து வச்சிருக்கணுமா என்று சொல்ல மீனாவின் குடும்பத்தினர் சந்தோஷப்படுகின்றனர் பிறகு மாலை எடுத்துக்கொண்டு இருவரும் மாலை மாற்றி பூஜை செய்து அர்ச்சனை முடித்த பின் ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா என்று பேசிக்கொண்டு இருக்கின்றனர். சரி நாங்க போய் பிரகாரத்தை சுத்திட்டு வரணும் என்று சொல்லிப் போக முத்து மீனா விட இவங்களுக்கு ஏதாவது பண்ணனும்னு தோணுது என்று சொல்லி மதியம் நம்ம வீட்டுல விருந்து கொடுக்கலாமா என்று கேட்கிறார். ஆனால் மீனா இவங்க வருவாங்களா என்று கேட்க அவங்க வர வேண்டியது என் பொறுப்பு என்று சொல்ல அத்தை ஒத்துப்பாங்களா என்று கேட்கிறார் பிறகு நான் அப்பா கிட்ட போன் பண்ணி சொல்லிட்ட அவர் ஒன்னும் சொல்ல மாட்டாரு நீ ரெடி பண்ணி என்று சொல்லி முடிவெடுக்கின்றனர். அப்படியே அவங்க மலேசியா சொன்னாங்களே அதனால ரோகினியோட அப்பாவை பத்தி விசாரிக்கலாம் என்று மீனா சொல்ல இது எனக்கு தோணாம போயிடுச்சு சரி விசாரிச்சிடலாம் என்று சொல்லுகிறார். அவர்களிடம் கேட்க அவர்களும் சம்மதிக்க மீனா முத்துவிடம் சிட்டி வீடியோவை வாங்க வந்த விஷயத்தை சொல்லுகிறார். சரி பாத்துக்கலாம் என்று அங்கிருந்து கிளம்புகின்றனர்.
மறுபக்கம் சிட்டி ரோகினி சந்தித்து வீடியோ எடுக்க முடியாத விஷயத்தை சொல்லுகிறார் போலீசார் தான் குடுக்கணும் சொல்றாங்க நீங்க வீடியோ மட்டும் எடுத்து குடுங்க நான் கண்டுபிடித்து கொடுத்துடறேன் என்று சொல்ல ரோகிணி மனோஜிற்கு ஃபோன் போட்டு போலீஸ் வந்ததா கொடுப்பேன்னு சொல்லி இருக்காங்க நீ கம்ப்ளைன்ட் கொடுத்த போலீஸ் கிட்ட கேளு என்று சொல்லி ஃபோனை வைக்கிறார்.
மறுபக்கம் விஜயா டான்ஸ் ஸ்கூலில் சொல்லிக் கொடுத்து கொண்டு இருக்க முடிந்த பிறகு பழக்கம் போல் ரதி விஜயாவை ஐஸ் வைத்து பேசுகிறார் நீங்க போயிட்டீங்க நாங்க உங்கள ரொம்ப மிஸ் பண்ணுவோம் உங்க டான்ஸ்சயும் மிஸ் பண்ணுங்க என்று சொன்ன நான் எங்க போகப்போறேன் என்று கேட்கிறார் நீங்கதான் ஈசிஆர் போக போறேன்னு சொன்னீங்களே என்று சொல்ல உடனே விஜயா உங்கள எல்லா விட்டு என்னால போக முடியாது என்று அளந்து விடுகிறார்.
பிறகு மாணவர்களை அனுப்பிவிட்டு விஜயா என்ன பேசுகிறார்? அதற்கு பார்வதியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.