Tamilstar
News Tamil News

தனது மகள்களை கொண்டு உழுத விவசாயிக்கு நன்கொடை அளித்த பாலிவுட் பிரபலம்!

அண்மையில், ஆந்திராவில் மாடுகளுக்கு பதிலாக தனது இரு மகள்களை வைத்து நிலத்தை உழவு செய்த விவசாயின் வீடியோவானது, சமூகத்தை தனது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மஹால்ராஜிவாரிபள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி நாகேஸ்வரராவின், தேனீர் கடை வியாபாரம் கொரோனா பொதுஊரடங்கின் காரணமாக வருமானம் இல்லாமல் போனது.

இதனால் அவரது கிராமத்தில் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை பயிர் செய்ய திட்டமிட்டார். ஆனால் டிராக்டர் மற்றும் மாடுகள் வாங்க பணம் இல்லாததால் தனது இரு மகள்களையும் கொண்டு ஏர் உழுது, நிலக்கடலை விதைத்தார்.இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் பரப்பியது.

 

அருந்ததி படத்தின் வில்லனாக, நமக்கெல்லாம் பரிச்சயமான பாலிவுட் பிரபல நடிகர் சோனு சூட். இந்த வீடியோவை பார்த்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“வயலின் உழவு செய்ததற்கு அந்த விவசாயிக்கு இரு மாடுகள் தானமாக வழங்கப்படும், தந்தைக்கு உதவி செய்த பெண்களின் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தற்போது இரு மாடுகளுக்கு பதிலாக, அவர் அந்த விவசாயிக்கு ட்ராக்டர் வாங்கி கொடுத்துள்ளார். இவரின் இந்த செயலுக்கு பல தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிகின்றது.