பாடகர் எஸ்.பி.பி அவர்களுக்கு இந்திய அளவில் அதிக ரசிகர்கள் உள்ளனர், திடீரென்று இவருக்கு கொரோனா தோற்று இருப்பதாக வெளியான செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.
அதனை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் சமீபத்தில் இவருக்கு கொரோனா சோதனை நெகடிவ் என வந்த பின்பும், மருத்துவமனையில் சில சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் தற்போது அவரின் மகன் S.P.B.சரண் அவரின் தற்போதைய நிலையில் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் தந்தையின் உடல் நிலையில் சீராக உள்ளதாகவும், தொடர்ந்து பிசியோ அளிக்கப்படுகிறது. மேலும் எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் உள்ளாதாகவும், ஆனால் அதிக நாட்களுக்கு அதன் உதவியும் தேவைப்படாது என பதிவிட்டுள்ளார்.
#spb health update 16/9/20
Dad is stable and is continuing physio. Ekmo and ventilator continue to be on but hopefully for not long. Thanks to the team of doctors from #MGMHealthcare and all of you who have been praying for him.
— S. P. Charan (@charanproducer) September 16, 2020