எஸ்பிபியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய சினிமாவின் முன்னணி பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன். கடந்த இரு வாரங்களாக கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களாகவே எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வெளிநாட்டு, உள்நாட்டு மருத்துவர்களுடன் கலந்து ஆலோசனை செய்யப்பட்டு உயிர்காக்கும் கருவிகள் உடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் தொடர்ந்து எஸ்பிபியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில் தற்போது அவரது நுரையீரலில் ரத்த கசிவு இருப்பதை அறிந்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளனர்.