சூப்பர் ஸ்டார் ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜனவரி மாதம் தனது கட்சியை தொடங்குவதாகவும், டிசம்பர் 31-ல் கட்சி தொடக்கத்திற்கான தேதியை அறிவிப்பதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “வரப்போகிற சட்ட மன்ற தேர்தலில், மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில், நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம்.
அற்புதம், அதிசயம், நிகழும்..! என பதிவிட்டுள்ளார்.
ஜனவரியில் கட்சித் துவக்கம்,
டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல 🤘🏻 pic.twitter.com/9tqdnIJEml— Rajinikanth (@rajinikanth) December 3, 2020