இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2வது அலை, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது.
அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா இருவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அப்போது எடுத்த புகைப்படத்தை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.