Tamilstar
News Tamil News

சர்ச்சைக்கு இடையில் நடிகர் சூர்யா செய்த பிரம்மிப்பான செயல்!

நடிகர் சூர்யா சினிமா படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் தனது அகரம் அறக்கட்டளை மூலம் பல மாண மாணவிகளுக்கு கல்வி அளித்து சேவை புரிந்து வருகிறார். இதற்கு அவரின் தம்பி கார்த்தி, அப்பா சிவக்குமார், மனைவி ஜோதிகா என பலரும் உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.

அண்மையில் ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் பற்றி பேசியதாக பல சர்ச்சைகள் எழுந்தன. பின் சூர்யாவும் அமைதியாகவும், பொறுமையாகவும் இது குறித்து விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் அவர் மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் வெங்கடேசன் நடத்தி வரும் அன்னவாசல் திட்டத்திற்கு ரூ 5 லட்சம் வழங்கியுள்ளாராம்.

மதுரையில் ஆதரவற்ற, வறுமையில் வாடும் மக்களின் வீடுகளுக்கே சென்று மதிய உணவளிக்கும் இந்த திட்டம் கடந்த மே 1 ல் தொடங்கப்பட்டது.

நாள்தோறும் 4500 பேரும் முட்டையுடன் மதிய உணவு வழங்கி வருகிறாராம். இதில் 400 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.