தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜெய் பீம்.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்ததை தொடர்ந்து பாலா இயக்கத்தில் உருவாகி வந்த வணங்கான் படத்தில் நடித்து வந்தார்.
இப்படியான நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடிகர் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகுவதாக பாலா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன் பிறகு நடிகர் சூர்யாவும் இது குறித்த தகவலை வெளியிட்டார்.
இதுவே ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் கடந்த சில தினங்களாக சூர்யா வாடிவாசல் படத்திலிருந்து வெளியேறியதாக தகவல் பரவியது. இதனால் சூர்யா வெற்றிமாறன் கூட்டணியை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைவதாக கூறி வந்தனர்.
ஆனால் வாடிவாசல் படத்திலிருந்து சூர்யா விலகுவதாக வெளியான தகவல் உண்மை இல்லை. இந்தப் படம் திட்டமிட்டபடி உருவாகும் எனவும் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள 42வது படத்தில் நடித்து முடித்ததும் இந்த படத்தில் நடிக்க தொடங்குவார் என படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
வாடிவாசல் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
