தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் என இரண்டு திரைப்படங்கள் நேரடியாக OTT-ல் வெளியாகிய நிலையில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்காக நடிகர் சூர்யா 35 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.