இந்திய சினிமாவின் பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு மற்ற சில பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவருடைய மறைவிற்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நிலையில் நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எஸ்பி பாலசுப்ரமணியன் குறித்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் உங்களின் சாதனைகள் என்றுமே ஈடு செய்ய முடியாதது என தெரிவித்துள்ளார். உங்களுடைய நினைவுகள் என்றுமே அழியாதவை என்று கூறியுள்ளார். மேலும் அவருடைய ஆன்மா இறைவனடியில் இளைப்பாறட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Feel a hole in my heart! It's like loosing a lifetime of happy moments! SPB Sir you’re Eternal.. Your achievements are irreplaceable! Thank you for showing us, what humility means. Will always treasure your work for life! Prayers and Peace…🙏🏽 #RIPSPBSir
— Suriya Sivakumar (@Suriya_offl) September 25, 2020