நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இம்மரணம் குறித்து அவரின் காதலி ரியா மீது சுஷாந்தின் அப்பா பல குற்ற வழக்குகளை பதிவு செய்தார். இதில் போதை பொருள் வழக்கில் ரியா கடந்த செப்டம்பர் 9 ம் தேதி மும்பை சிறையில் அடைக்கப்பட்டார்.
இரண்டு முறை முயற்சி செய்தும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் அவர் போதைப்பொருள் கட்டுப்பாட்டு மையம் தனக்கு எதிராக சூனிய வேட்டை நடத்துகிறது என கூறினார்.
ரியா தன்னுடைய ஜாமீன் மனுவில் சுஷாந்த் மட்டுமே போதைப்பொருள் பயன்படுத்தினர். அவர் தன்னுடைய ஊழியர்களை தனக்கு போதை பொருள் வாங்குமாறு அறிவுறுத்தினார். அவர் இன்று உயிருடன் இருந்தால் சிறிய அளவில் குற்ற தண்டனையாக ஒரு வருடம் வரை ஜாமீன் இல்லா சிறைதண்டனை வழங்கப்பட்டிருக்கும்.
போதை பழக்கத்தை தக்க வைக்க தனக்கு நெருக்கமானவர்களை அவர் பயன்படுத்திக்கொண்டது துரதிர்ஷட வசமானது என கூறியுள்ளார்,