மூளை நரம்பு பாதிப்பு ஏற்பட்டால் சில அறிகுறிகள் வைத்து கண்டுபிடிக்கலாம்.
மனித உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளும் முக்கியம். அதில் மிகவும் முக்கியமான ஒன்றுதான் மூளை. அது ஒருவரின் நினைவுகள், ஆளுமை, அறிவாற்றல் என அனைத்திற்கும் முக்கியமாக இருக்கிறது.
அப்படி அந்த மூளையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது நமக்கு கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.
மூளையில் இருக்கும் நரம்புகள் பலவீனமாக காரணம் தேவையான ஆக்சிஜன் அனைத்து செல்களிலும் சரியாக செல்லாதது தான். அப்படி செல்லாமல் இருக்கும்போது மூளை நரம்புகள் பாதிக்கப்படுகிறது. அதற்கான அறிகுறிகளை பற்றி பார்ப்போம்.
அடிக்கடி கடுமையான தலைவலி ஏற்பட்டாலும் உடலில் கூச்ச உணர்வு இருந்தாலும் மூளை நரம்பு பலவீனத்திற்கு முக்கிய அறிகுறியாக இருக்கிறது. மேலும் உடலை பலவீனமாக்குவதும் ஒரு கை பலவீனம், சமநிலையை இழத்தல், கை நடுக்கம் போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்.
மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை உடனே அணுகி உடல் நிலையை சரி பார்த்துக் கொள்வது நல்லது.