அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் தல. இவர் படங்கள் நடிப்பதை தாண்டி மற்ற நிறைய விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுபவர்.
சமையல், போட்டோ கிராபி, தோட்டம் அமைப்பது, துப்பாக்கி சுடுதல் என அடுத்தடுத்து தனது ஆர்வத்தை சில விஷயங்களில் காட்டிக் கொண்டே இருக்கிறார்.
அண்மையில் அவரது பெயரில் மோசடி நடப்பது அறிந்து ஒரு அறிக்கையும் விட்டார். அது மற்றவர்கள் தன் பெயர் கேட்டு ஏமாந்து போக வேண்டாம் என்பதால் அப்படி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் அரசியல்ல முக்கிய பங்கு வகித்த அமர் பிரசாத் ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில், சுமார் 10 மாற்றுத் திறனாளி வீரர்களுக்கு வெளிநாடுகளில் விளையாட உதவி செய்தார் என்று கூறியுள்ளார்.
மேலும் அஜித் தோற்றத்தில் மட்டுமல்ல குணத்திலும் பால்போல் வெள்ளை மனம் கொண்டவர், அவரை ஏளனமாகப் பேசுவது தவறு என பதிவு செய்திருக்கிறார்.
நடிகர் #அஜித் தோற்றத்தில் மட்டுமல்ல குணத்திலும் பால்போல் வெள்ளை மனம் கொண்டவர். நான் தமிழக மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு சங்கத்தில் தலைவராக இருந்த இரண்டு வருடங்கள் சுமார் 10மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு வெளிநாடுகளில் விளையாட உதவி செய்தார்.அவரை ஏளனமாகப் பேசுவது தவறு@SureshChandraa pic.twitter.com/2vVhlN9F80
— Amar Prasad Reddy🇮🇳 (@amarprasadreddy) September 18, 2020