Tamil News

செல்வராகவன் படத்துக்கு தொடரும் சிக்கல்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் செல்வராகவன். ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘என்.ஜி.கே.’ உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனது தம்பி தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன்’ படத்தை இயக்கி வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வரும் நிலையில் படத்தில் இருந்து அடுத்தடுத்து ஒளிப்பதிவாளர்கள் விலகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

‘நானே வருவேன்’ படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்வதாக இருந்தது. பின்னர் அவர் விலகியதால், அவருக்கு பதில் ‘சாணிக்காயிதம்’ என்ற படத்தை ஒளிப்பதிவு செய்த யாமினி ஒப்பந்தமானார். ‘சாணிக்காயிதம்’ படத்தை பார்த்து பிரமித்து போன செல்வராகவன், தனது படத்தில் அவரை ஒப்பந்தம் செய்தார். இந்த நிலையில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் யாமினியும் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘செல்வராகவனுடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. நிறைய கற்றுக்கொண்டேன். சில தவிர்க்க முடியாத காரணங்களால் ‘நானே வருவேன்’ படத்தில் இருந்து நான் விலகுகிறேன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். உங்களது ஆதரவுக்கு நன்றி’, என்று கூறியுள்ளார்.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மட்டுமே நடந்து வரும் நிலையில் அடுத்தடுத்து இரண்டு ஒளிப்பதிவாளர்கள் படத்தில் இருந்து விலகி உள்ளது படப்பிடிப்பு பணியில் தொய்வை ஏற்படுத்தி உள்ளது.

Suresh

Recent Posts

கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு இணைத்த கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், போட்டோஸ் வைரல்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழி…

2 hours ago

பணத்தை கொடுத்த ஜீவா, முத்தம் கொடுத்த ஷாக், நடக்கப்போவது என்ன?

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் வரும் நாட்களில் நடக்கப்…

2 hours ago