டிக் டாக் ஆப்பில் புகழ் பெற்று விளங்கிய இலக்கியா, அவ்வப்போது தனது விடியோக்களில் ஆபாசம் காட்டிவந்ததால் அவர் மீது பல குற்றசாட்டுகள் வைக்கப்பட்டது.
ஆனாலும் அவரை பின்தொடருவோரின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அவர் பதிவிடும் விடியோக்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
இந்நிலையில் இந்திய அரசு டிக் டாக் உட்பட 59 சீன செயலிகளை தடை செய்துள்ளது. இதுகுறித்து தற்போது இலக்கியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது “டிக் டாக்கை தடை செய்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி, நாம் நாட்டிற்காக இன்னொரு நாட்டுடன் மோதி, நமது 20 ராணுவ வீரர்கள் இறந்துள்ளனர்.
அதற்காக டிக் டாக்கை தடை செய்துள்ளது பெருமையாகவுள்ளது. இந்தியாவில் டிக் டாக்கை தடை செய்ய பல போராட்டங்கள் நடந்தது, ஆனால் தற்போது ஒரு நல்ல விஷயத்துக்காக தடை செய்யப்பட்டுள்ளது சந்தோஷம் அளிக்கிறது” என கூறியுள்ளார்.