விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘துக்ளக் தர்பார்’. புதுமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ள இப்படத்தில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.
அரசியல் கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 18-ந் தேதி மாலை 6 மணிக்கு ‘துக்ளக் தர்பார்’ படத்தின் பாடல்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால், இப்படத்தை நேரடியாக டி.வி.யில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.