தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. நன்றாக இருந்தாலும் இந்த படம் முதல் நாளில் வெறும் 1.72 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தின் விழா ஒன்றில் பேசிய போது தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் சம்பளத்தை குறைத்து தான் படம் ஓடும் பேசியுள்ளார். கேஜிஎஃப் படத்தில் யாஷின் சம்பளத்தோடு ஒப்பிட்டு பேசிய அவர் சம்பளத்தை குறைத்து மேக்கிங்கிற்கு பணத்தை செலவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் பீஸ்ட் படத்திற்காக 105 கோடி சம்பளம் வாங்கியதும் அஜித் தன்னுடைய சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி விட்டதாகவும் சொல்லப்பட்டு வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பேசியிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
