தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மங்காத்தா. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். கதை கூட ரெடி, அஜித் ஓகே சொன்னால் உடனே படத்தை இயக்க தயார் என வெங்கட்பிரபுவும் வெளிப்படையாக கூறி வருகிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏப்ரல் 1ம் தேதி மன்மதலீலை வெளியாக உள்ள நிலையில் இதற்கான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது மங்காத்தா படத்தில் அஜித்துக்கு பதிலாக நாக சைத்தன்யா தான் நடிக்க இருந்தார் என்று கூறியுள்ளார். சில காரணங்களால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
முதல் முறையாக வெங்கட் பிரபு நடித்துள்ள இந்த தகவல் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு அர்ஜுன் தான் பர்பெக்ட், ஒருவேளை நாக சைதன்யா நடித்திருந்தால் அது செட்டாகி இருக்குமா என்பது சந்தேகம் தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
