தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் நாளை பீஸ்ட் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இப்படியான நிலையில் விஜய் மிஸ் செய்து பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க ஒப்பந்தமாகி கடைசியில் படம் முழுமையாக நிறைவடையாமல் ட்ராப் ஆன படம் பற்றி பார்க்கலாம் வாங்க.
ஆமாம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாக இருந்த ராணா திரைப்படம் பாதியில் ட்ராப் ஆனது. இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது தளபதி விஜய் தானாம்.
சில காரணங்களால் விஜயால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போக அதன் பின்னரே இந்த கதையை ரஜினிக்கு சொன்னாராம் கேஎஸ் ரவிக்குமார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகியுள்ளது.