தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் இன்று சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.
அதற்கு முழுக்க முழுக்க சிவகார்த்திகேயன் உழைப்பும் விடாமுயற்சியும் தான் காரணம். மேலும் தளபதி விஜய்க்கு அடுத்ததாக சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நடிகராக வலம் வருகிறார்.
இவரது நடிப்பில் தற்போது டாக்டர், அயலான் உள்ளிட்ட திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இந்த படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் அடுத்ததாக துல்கர் சல்மானை வைத்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். படத்திற்கான வேலைகளில் தேசிங்கு பெரியசாமி இறங்கி இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு கிளம்பியுள்ளது.
இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தைப் போன்ற ஒரு கதை சிவகார்த்திகேயனுக்கு கச்சிதமாக பொருந்தும் என கூறி வருகின்றனர்.